Wednesday 12 December 2012

அவள் நினைவைச் சுமந்து நான்.......!!!

ஊரை விட்டு வந்த பின்பும் - அன்பே 
என்னை நீ கொல்லும் வித்தை 
கற்றுக் கொண்ட பள்ளி எங்கே...!

ஆளை மயக்கும் வித்தை எல்லாம் 
கண்டு கொண்டேன் உன்னிடத்தில் - ஆனால் 
என்னை கொல்லும் வித்தை மட்டும் 
எங்கே கற்றாய் சொல்லாய் என் கிளியே...!

ஊரை விட்டு உறவை விட்டு 
நாடு விட்டு எங்கோ போயிற்றேன் - தினம் 
ஊனை உருக்கி உடலை உருக்கி 
உன்னை நினைக்கும் என்னை மட்டும் 
தினமும் நினைக்க ஏன்  தான் மறுத்தாய்...!

தென்றல் காற்றே தெள்ளு தமிழே 
சந்தம் சேர்த்து கவிகள் படைப்பேன் 
சுருதி சேர்த்து படிப்போம் வாடி 
சொர்க்கம் தேடி நாளும் போவோம் 
வாடி நீயே....................

கவிஞர்: சாதுரியன்