Tuesday 19 June 2012

உனைப் பார்க்க நான் வந்த போது நீ எங்கே சென்றாய்...?

ஒரு கோடி பூவுக்குள் உருவான பூவே.
உல்லாச வானில் சல்லாபம் கொள்ளும்
சங்கீதம் கூட உன்னோடு தானோ.

உருண்டோடிப் போகும் காலங்கள் நூறு - ஆனால்
எங்கள் அன்பென்ற ஊஞ்சல் எந்நாளும் ஆடும்.

ஊர்விட்டு உளர்வந்து நான்வந்த போது
உன் நெஞ்சில் உன் அன்பு
தேனாறாய் ஓடும்.

உயிர் கூட உனக்காக எனச் சொன்ன போதும்
உனைப் பார்க்க நான் வந்த போது 
நீ எங்கே சென்றாய்...?

மலரே உன்னை மாலையாய் சூட்டுவேன்
மண மாலையாய் ஆட்டுவேன் - என் 
வாழ் நாளில் மணமாது நீ மட்டும் தாண்டி

கலிகாலம் சதிசெய்யும் பலபேரின் வாழ்வில்
கனியாகும் நம் வாழ்வில்
கலங்காத பாசம்.

ஒருநாளும் எனைவிட்டுப் போகாதே பூவே
உனைப் பார்க்க நான் வந்த போது 
நீ எங்கே சென்றாய்...?
உள்ளம் உருமாறி அனலாகிப் போச்சு
நீ எங்கு சென்றாய்...?

கவிஞர்: சாதுரியன் 

Friday 8 June 2012

இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா....?


நித்திரை எனக்குக் கிடையாது
என் நினைவுகள் எப்பவும் தொலையாது.
பத்தரை மணிக்குமேல் தனிமையிலே
பரதேசியாய் தினமும் உலாவுகிறேன்.

பாவி என் நெஞ்சிலே பால்வார்க்க
தேவியை ஒருமுறை வரச்சொல்லு.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா..?

பிரமனைக் கூட வரவளைப்பேன்
விதவிதமாக கெளரவிப்பேன்.
என்னவள் போல இனி ஒருத்தி
மண்ணினில் வேண்டாம் எனவுறைப்பேன்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா..?

என் கற்பனை கடந்த காவியமே
கம்பன் கீதையை வென்ற ஓவியமே.
கற்பனை ஆற்றினில் குளிக்க வைத்தாய்
என்னை காமனை போலவே நினைக்க வைத்தாய்.

காற்றினில் தென்றல் ஆனாலும் 
உனக்கினி சேதிகள் சொல்லமாட்டேன்.
இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா..?

கவிஞர்: சாதுரியன்