காற்றடித்து நூல் அறுத்த
பட்டம் போல்
நேற்றிருந்த சொந்தம் ஒன்று
என்னை நீங்கி போச்சு
நினைவுகளை சுமந்து கொண்டு
வாழ்வதாலே
கனவுகளும் வெறுப்பாய் தான்
என்னை கொல்லுது
வேர் இழந்து விருஷம் ஒன்று
சாஞ்சு போச்சுதே
ஊர் இழந்து வந்த பின்பும்
உறக்கம் இல்லையே
கார் இருட்டில் தேடுகிறேன்
எந்தன் காதலை
என் கண்ணின் மணி தொலைந்து போச்சு
அவள காணல
ஊர் முழுக்க என்னை பார்த்து
கேலி பண்ணுது
ஓட்டை பையில் போட்ட பூ போல்
நானும் ஆகினேன்...!
கவிஞர்: சாதுரியன்
கவிஞர்: சாதுரியன்