பாசம் வளர்த்தேன் பழகத் துடித்தேன்
கவிஞர்: சாதுரியன்
காலம் முழுதும் கவிதை வடிப்பேன்.
கலங்க வைக்கும் கவிதை நீயோ..?
தேகம் வியர்க்கும் நிலமை எனக்கு
அள்ளிக் கொடுத்த அழகுத் தளிரே.
எந்த உறவும் உன்னை விடவும்
எந்தன் வாழ்வில் என்றும் இல்லை.
கொஞ்சும் மழலைக் குழந்தை நீயே
கூடிக் குலவும் நிலமை தாவேன்.
அஞ்சும் நிலமை எனக்கு வேண்டாம்
அணைக்கும் நினலே அருகில் வா நீ.
பஞ்சவர்ணக் கிளியே எந்தன்
பருவ முல்லைக் கோடியே நீயும்.
உருவம் மறைத்து தினமும் என்னை
உருக வைத்தல் சரியோ கண்ணே.
நீண்ட வானில் வர்ணம் தீட்ட
துணிந்து விட்ட கலைஞன் ஆனேன்.
வானவில்லை போலே நீயும் - பல
வர்ணம் போல எண்ணம்மாரி
என்னை ஏன்தான் கொல்ல நினைத்தாய்..?
வண்ணத் தமிழில் உன்னை வடிக்க
வார்த்தை தேடி ரொம்பக் களைத்தேன்.
உந்தன் மனதின் எண்ணம் அறிய
வங்கக் கடலில் மூழ்கத் துடித்தேன்.
தமிழின் அர்த்தம் கண்டேன்.
கடலின் ஆழம் கண்டேன்.
உன்னை வடிக்க வார்த்தை இல்லை.
உன் மனதின் ஆழம் காணவேண்டி
உறக்கம் கலைத்தேன்.
உதிரம் வடித்தேன்.
முடியவில்லை எந்தன் உயிரே,
முடிவு கூட எந்தன் உயிரே.
கண்ணின் மணியே என் கண்ணின் ஒளியே
உன்னை விட்டுப்பிரிய என்றும் நினைக்கேன்.
பேசமறந்தால் என்னை மறப்பேன்.
உயிரை துறப்பேன்.
அன்பே என்னுடன் எதற்க்காக பேச
மறுக்கிறாய்...!!!
கவிஞர்: சாதுரியன்