Saturday 25 February 2012

வருடம் ஒன்று ஆனது...!!!

சொந்தம் என்று நான் இருந்தேன் - என்
சொப்பனத்துப் பூம் பொழிலே.
கந்தகத்தைப் போல் உருக்கி
காற்றினிலே மிதக்கிறது என் இதயம்.


சந்தனத்து மேனியிலே
சாய்ந்திருவாய் என நானிருந்தேன்.
சொன்னாயடி ஒரு வார்த்தை...!
சுட்டெரிக்கும் சூரியன் போல - என் இதயம்
கந்தகத்தைப் போல் உருக்கி
காற்றினிலே மிதக்கிறது...!


ஒரு வருடம் ஆனாலும் - ஆறவில்லை
என் இதயம்.
சொல் அம்பு தைத்தவுடன்
சுறு சுறுப்பு இழந்து போனேனடி.


சோர்ந்து தாடியுடன் - ஒரு
பேடியும் ஆனேனடி - போடி
 பைத்தியக்காரி - நானும்
பைத்தியம் தாண்டி...!


கவிஞர்: சாதுரியன் 

Friday 24 February 2012

மழை மழையாய்...!

"மழையே
சாலையை
நன்றாகக்
கழுவி விடு
பூப்பெய்தியபின்
என்னவள்
பூமியில்
கால் வைக்கிறாள்"

-கவிதை நூல்: மழை மழையாய்.
கவிஞர் : அசன்பசர்.-