Saturday 9 March 2013

தாடி கொண்ட போடி....!!!

அழகிய கார்கால மேகமாய் 
அழுகையின் கொடுமைகள் 
நெஞ்சில் ஏறமாய்.

வெண்முகில் விலத்திய 
தேன் நிலவாய்.
பட்டாடை போர்த்தி 
என்னவள்.

பருவ காலங்களை 
வென்றவள்.
பருவமடைந்த 
பாவையாய்.

உருவங்களை என்னுள் 
பதிய வைத்தவள் - முழு 
உருவமாய் என்றும் 
என்னில் நிறைந்தவள்.

கனவுகள் என்றும் தந்தவள் 
கவிதைக்கு கவிதையானவள் 
கவிக்கும் என் 
தாடிக்கும் காரணமானவள்...!

கவிஞர்: சாதுரியன் 

Friday 18 January 2013

என்னை விட்டு நீ எங்கே சென்றாய் என்னவளே.....!!!

வானை விட்டு நிலவு கொஞ்சம் 
விலகிச் சுற்றி கொண்டால் கூட.
இருட்டு என்று நொந்து கொள்வோம்.

என்னை விட்டு தள்ளி போனாய் 
குருட்டு வாக்கு என்று சொல்லி.
கேலி செய்து உலகம் இங்கே 
திருட்டு பட்டம் தந்தாள் கூட 
விரும்பி நானும் ஏற்றிருப்பேன்.

உன்னை திருடி விட்ட சந்தோசத்தில் 
திருந்தி நானும் வாழ்ந்திருப்பேன்.
உருகி விட்ட பணியை போல 
ஓடும் தண்ணீர் ஆனேன் நானே.

உன்னை உறைய வைக்கும் நிலைமை எனக்கு 
என்று கொடுப்பாய் பூவின் தேனே.
புதுமை தீயே புரியும் நிலமை 
அறிவாய் நீயே...!!!

கவிஞர்: சாதுரியன்