Saturday 10 March 2012

உன்னை சுமந்த எந்தன் மனசு விம்மி விம்மி அழுதே......!!!

வாலிபம் என்னை வாட்டுது 
வண்ணமகள் உன் நினைவால்.

நானிருந்த நாட்கள் 
கொஞ்சம் என்று - ஆனாலும் 
நீயமர்ந்த பின்பே என் மனம் 
நின்மதி பெற்றதடி 

சொந்தம் என்று 
உன்னை சுமந்த எந்தன் மனசு
விம்மி விம்மி அழுதே.
விடியல் காணும் வரை...!


கவிஞர்: சாதுரியன் 


Friday 2 March 2012

என் கல்லறையில் பேசி விடு...!!!

மொழிகளை ஊமையாக்கி
நீ மௌனமாய் இருக்கின்றாய்.
அந்த மௌனமே 
சுட்டெரிக்கும் ரவையாய் - என்
நெஞ்சை துளைத்து செல்கிறது.


சத்தமில்லாத பாசை கூடவா
உன்னிடம் ஊமையாகி விட்டது.
இப்போது தான் புரிகிறது
நீ மௌனிப்பதே.


அப்படியே நான் மண்ணறை ஆனாலும்
மனம் என்னவோ வெளியேதான் உள்ளது.
அப்போதாவது ஒன்று இரண்டு
வார்த்தையை பேசிவிட்டு செல்.
சாமதியாவது சந்தோசமாக உறங்கட்டும்.



கவிஞர்: சாதுரியன் 

Thursday 1 March 2012

என் இதயத்தின் வலி..............!!!

என் நெஞ்சில் 
ஏராளமான காயங்கள் உண்டு.
யாரேனும் கண்டதுண்டா...?


கண்ணீரை கழுவுகின்றேன் 
கவிதைகளாய்...!
கைக்குட்டை தருவாயா 
ஆறுதலாய்...!


நேசிப்பைப் கூட 
வாழ்த்தாய் வசித்தவர்களே.
பாருங்கள் இந்தக் கவிதைகளின் பக்கங்களில்
உங்கள் முகம் கூட 
எங்காவது ஒளிந்திருக்கும்...!


கவிஞர்: சாதுரியன்