Saturday 9 March 2013

தாடி கொண்ட போடி....!!!

அழகிய கார்கால மேகமாய் 
அழுகையின் கொடுமைகள் 
நெஞ்சில் ஏறமாய்.

வெண்முகில் விலத்திய 
தேன் நிலவாய்.
பட்டாடை போர்த்தி 
என்னவள்.

பருவ காலங்களை 
வென்றவள்.
பருவமடைந்த 
பாவையாய்.

உருவங்களை என்னுள் 
பதிய வைத்தவள் - முழு 
உருவமாய் என்றும் 
என்னில் நிறைந்தவள்.

கனவுகள் என்றும் தந்தவள் 
கவிதைக்கு கவிதையானவள் 
கவிக்கும் என் 
தாடிக்கும் காரணமானவள்...!

கவிஞர்: சாதுரியன்