ஒரு நிமிடம் நில்லாயோ.
உன் அழகை விஞ்சிவிட்ட
என்னவளை பார்க்க என்று
ஒரு நிமிடம் நில்லாயோ.
காடு மலை ஏறி போகும்
கறுப்பு நிலா நீ.
தங்க ரதம் ஏறி வரும்
தங்க நிலா பார்க்க நிற்காயோ.
பாதி நாளில் தேய்ந்து நீயும்
பௌர்ணமியாய் உருவம் காட்டுவாய்.
என் பருவ நிலா எப்பொழுதும்
வளர்ந்து வளர்ந்து முழு உருவம் காட்டுவாள்.
நீ தோன்றிய ஆண்டு பல கோடி
தினம் தேய்ந்து தானே வளர்கிறாய்.
இவள் தேன்றிய ஆண்டு மூவேழு
முடிந்து வருடம் இரண்டாச்சு.
இன்றும் பூத்து குலுங்குகிறாள்
பிறந்த நாளில் பௌர்ணமியாய்
விளங்குகின்றாள்.
பார்த்து நீயும் சென்று விடு
பாதியான வெண்ணிலாவே.
சேதி ஒன்று சொல்லிவிடு
அவள் சிரிப்பொலியை கொள்ளையிடும்
மன்னவன் நான் தான் என்ற
சேதி ஒன்று சொல்லிவிடு.
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment