உன் விரல் பட்ட இடம் தன்னில்
விதமான படமொன்று
பதித்து விட்டேன் பச்சையாக
உன் ஐந்து விரல் பட்ட இடம்
வெட்கம் கொள்ளுதே
கொஞ்சி விளையாட - மனம்
திட்டம் போடுதே
நெஞ்சறையில் உன் நினைவு
நித்தம் உள்ளதால்
பஞ்சனைக்கு சென்று விட
நாட்கள் எண்ணுதே
வித்தை பல கற்ற மனம்
வெட்கம் கொள்ளுதே
அத்தை மகள் நீ எனக்கு
முத்தம் தந்ததால்
என்றுமடி கண்டதில்லை
இந்த சுகம் நானும் - நீ
தந்த சுகம் அத்தனையும்
சாகும் வரை காணும்...!
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment