பலநாள் பரதேசி வாழ்க்கை
பார்ப்பார் யாருமின்றி
பாசமெனும் வேச வலையில்
பாவியான என் வாழ்க்கை
பதறுதன்பே தினமும் நீயின்றி..!
உறவுகள் பல இருந்தும்
உமையாகி கிடக்கிறது
என் வாழ்க்கை
என் வாழ்க்கை
உருளுமா என் ஜீவன் இன்னும்
உலகத்தார் மத்தியிலே
உற்றவள் நீயின்றி..!
உற்றவள் நீயின்றி..!
வஞ்சகத்தார் சதியினிலே
மிஞ்சியது வாசமில்லா கண்ணீர்தான்
மிஞ்சியதும் எனக்கில்லை
எனை மீட்பார் யாருமில்லை
மீளா துன்பத்தில் ஆழ்கிறது
என் மனம் நீயின்றி..!
எனை மீட்பார் யாருமில்லை
மீளா துன்பத்தில் ஆழ்கிறது
என் மனம் நீயின்றி..!
இறைவனிடம் வேண்டுகிறேன்
இன்னும் நீயின்றி
என்னால் வாழ முடியாது
இன்றே பொழுது புலருமுன்
இன்னும் நீயின்றி
என்னால் வாழ முடியாது
இன்றே பொழுது புலருமுன்
முடித்து விடு என் வாழ்க்கையை என்று...!
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment