வில்லெடுத்து அன்பு
எய்திடுவாய் என்றிருந்தேன்
வல்ல சொல்லெடுத்து
அம்பு எய்து கொன்றிட தான்
எண்ணம் வந்ததோடி...?
அம்பு எய்து கொன்றிட தான்
எண்ணம் வந்ததோடி...?
உதிரம் பாய்கிறது
உடம்பில் ஊனமில்லை
உடம்பில் ஊனமில்லை
உள்ளம் நோகுதடி
நீயடித்து
நீயடித்து
உத்தமி தான் என்றும் நீ எனக்கு
கற்பனைகள்
தினம் உனக்கு,
தினம் உனக்கு,
கனவுகள் தான்
மீதம் எனக்கு
மீதம் எனக்கு
விற்பனைகள் செய்பவளே - மனசு
விற்கும் விலை சொல்லேனடி
சொர்ப்பனங்கள்
கண்ட மனம்
கண்ட மனம்
பாற்கடலில் குளிக்கவென்று
பாலைவன கானல் நீரில்
குளிக்கலாயிர்று
பாலைவன கானல் நீரில்
குளிக்கலாயிர்று
தென்றல் காற்றிலே சுகமிருக்கு
என்று போனேன்
சோகமதை அள்ளி தந்து - அந்த
சூறாவளி தான் எனக்கு
சொந்தமாயிற்று
சொந்தமாயிற்று
அழகொழிரும் மனவலிமை
அழிந்தே போச்சு
அழிந்தே போச்சு
அழகமைந்த ஆலிலை மர அடி தான்
சொந்தமாச்சு
சொந்தமாச்சு
அரவணைக்க ஆல்லிலையே
விளுதெரிந்த உறவுகளும் விலகி போச்சு
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment