கொடி முல்லைப் பூவே
நீ கொல்லி மலை தேனே
விதி உள்ள நாள் எல்லாம்
உன் கூட தானே
என்றென்னி நானும்
உனக்காக தானே காத்திருந்தேனே...!!!
கண் மூடி நானும்
துயில் கொள்ள போவேன்
கடிகார முள்ளோ
அதிகாலை காட்டும்
என் கண்கள் ஏனோ
துயில் கொள்ளவில்லை
உன்னைக் காணும் வரைக்கும்
துயில் என்ற வார்த்தை
எனைக் கொல்லும் விஷமோ...?
என்னோடு நாளும்
உறவாடும் பூவே
தண்ணீரில் மீனாய்
கலக்கங்கள் வேண்டாம்
எந்நாளும் நானே
உனக்காக தானே
உயிரோடு வாழ்வை
தினம் கொண்டு போறேன்
என்னிடம் வா நீ
உனக்காக தானே
கத்திருப்பேனே...!!!
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment