Wednesday 27 March 2019

உன்னுள் வாழ்கின்றேன் நான்...!!!



பொன் முட்டை இடுகின்ற
பெண் அன்னமே
என்னாலும் உன் நெஞ்சுக்குள்
என் எண்ணமே.

கண்ணுக்குள் படம் போட்டு
தினம் காட்டுறாய்
கண் முன்னே வந்த பின்பு
ஏமாற்றுறாய்
கவி பாடும் பேர் கொண்ட
உன் நெஞ்சுக்குள்
கலங்காத எண்ணங்கள் எங்குள்ளது..?

ஒரு நாளில் உயிர் கொல்லும்
பேராசை எனக்கில்லையே
ஒவ்வெரு நாளும்
உன் எண்ணம் எனக்குள்ளது 
செவ்வந்தி தோட்டத்திலே
நீ நின்ற வேளை
செவ் அந்தி பொழுது நேரம்
நான் அங்கு வந்தேன்.

பொன்வண்ணமே
நான் வந்து பூச்சூடவா
பெண் அன்னமே
நான் உனைச்சூடவா..?

வின் மீன்கள் 
எமை வந்து தேடட்டுமே
விடி காலை வரும் மட்டும்
மலரட்டுமே
விரிசல்கள் இல்லாத
எம் அன்பு தொடரட்டுமே.

கண்ணுக்குள் எரிகின்ற
ஒளி தீபமே
காதலின் பெயர் சொல்ல
என்னவேணுமோ....?
என்னை வேணுமோ....? 

கவிஞர்: சாதுரியன் 

No comments:

Post a Comment