சொப்பனத்துப் பூங்குயிலே
சொந்தமான தாமரையே
அற்புதங்கள் புரிவதிலே - நீ
அமுதரசக் கிண்ணமடி
கற்பனைக்கு உகந்தது போல்
கழி நடனம் புரிந்து என்னை - காமனவன்
பண்டிகைக்கு தினம் அனுப்பி வைப்பவளே
சொற்பனங்கள் ஏன் உனக்கு
தப்பாய்த் தோணுது
சொக்கத் தங்கம் எப்பொழுதும்
தகரமாகுமா...?
நித்தமும் என் நெஞ்சணையில்
உறக்கம் கொள்ளடி
நினைவுகளை மறந்து என்னுள்
உறவு கொள்ளடி
எப்பவும் நீ எனக்கு இஸ்ர தேவதை - இணைந்து
நீயும் வாழ்ந்து விட்டால்
நானும் பெறுவேன் காமன் பண்டிகை...!
கவிஞர்: சாதுரியன்
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment