Friday, 14 December 2018

உன் மடிமீது துயில் கொள்ள நிலையான வரம் சொல்லு...!



சொர்க்கமே வந்து என்னை வரவளைதது
உன் முகம் பார்த்திட சொந்தமனவளே...!
சோகம் ஏன் எனக்கு சொந்தமானது...?

வார்த்தைகள் வரைகின்ற வசந்த கீதம்
வாசம் கொள்ளவில்லையடி
உன் மடிமீது துயில் கொள்ள
நிலையான வரம் சொல்லு

உன்னோடு நான் இருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மண்ணோடு  போகும்  வரையும்
மறந்திட முடியுமோடி...!

அழகென்ற பெயர் கொண்ட
ஆசை அடங்காத இராட்சசியோ
இதழோடு இதழ் சேரும்
இரவுகள் தினம் வேண்டும்...!


கவிஞர்: சாதுரியன் 

No comments:

Post a Comment