Monday 10 December 2018

உன் நினைவில் வாழ்கிறேன்...!



நிலவுபோல் தேய்வதில்லை
உந்தன் ஞாபகம்
கனவுகளில் மிதக்கவைக்கும் 
உந்தன் பூமுகம்

நெஞ்சில் நிற்கும் சொந்தமான
வண்ண ரோஜாவே
நெஞ்சில் நிற்கும் வார்த்தைகளை
அள்ளி வீசியே

நெஞ்சணைக்கும் நாட்களினை 
சொல்லி போவேண்டி
பஞ்ச்சணைக்கு போகும் வரை
சின்ன பிள்ளை தான்
பரிதவிக்க விட்டுடாதே - என் 
வண்ண முல்லையே

கருவறையில் நான் பிறந்தேன்
பச்சை பிள்ளையாய்
உந்தன் கருவறைக்குச் சொந்தமாகும்
எந்தன் பிள்ளையே

காதல் சுகம் தொடர்ந்து விட்டால்
இந்த வார்த்தைகள்
கடுகளவும் பொய்க்காது - எந்தன்
காதல் பைங்கிளி

சிறகடிக்கும் நாள்வரைக்கும்
சிறை போல் வாழ்ந்திடு
சிறையெடுக்க நான் வருவேன்
கண்ணே தூங்கிடு
கலக்கம் இன்றியே...!!!


கவிஞர்: சாதுரியன் 

No comments:

Post a Comment