நிலவுபோல் தேய்வதில்லை
உந்தன் ஞாபகம்
கனவுகளில் மிதக்கவைக்கும்
உந்தன் பூமுகம்
நெஞ்சில் நிற்கும் சொந்தமான
வண்ண ரோஜாவே
நெஞ்சில் நிற்கும் வார்த்தைகளை
அள்ளி வீசியே
நெஞ்சணைக்கும் நாட்களினை
சொல்லி போவேண்டி
பஞ்ச்சணைக்கு போகும் வரை
சின்ன பிள்ளை தான்
பரிதவிக்க விட்டுடாதே - என்
வண்ண முல்லையே
கருவறையில் நான் பிறந்தேன்
பச்சை பிள்ளையாய்
உந்தன் கருவறைக்குச் சொந்தமாகும்
எந்தன் பிள்ளையே
காதல் சுகம் தொடர்ந்து விட்டால்
இந்த வார்த்தைகள்
கடுகளவும் பொய்க்காது - எந்தன்
காதல் பைங்கிளி
சிறகடிக்கும் நாள்வரைக்கும்
சிறை போல் வாழ்ந்திடு
சிறையெடுக்க நான் வருவேன்
கண்ணே தூங்கிடு
கலக்கம் இன்றியே...!!!
கவிஞர்: சாதுரியன்
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment